அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்த முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்

Date:

அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்தமை தொடர்பில் முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்கவுக்குச் சொந்தமான பண்ணை ஒன்றிற்கு எதிராக வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

நேற்று (01) குருநாகல் மாவட்டத்தின் கொபேகனே, மிரிஹானேகம, ஔலேகம மற்றும் பிங்கிரிய பிரதேசங்களில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்வது தொடர்பான சோதனைகள் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்டன.

அங்கு கொபேகனே பகுதியில் நடத்தப்பட்டு வந்த சரத் ரத்நாயக்க என்பவருக்குச் சொந்தமான முட்டைப் பண்ணையில் அதிக விலைக்கு முட்டை விற்பனை செய்யப்பட்டதை நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், அப்பகுதியில் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்த மூன்று பண்ணைகளுக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...