ஆஸ்திரேலியாவில் 800 கிலோ போதைப்பொருள் கடத்திய 3 வாலிபர்கள் கைது

Date:

ஆஸ்திரேலியாவின் ராட்னெஸ்ட் தீவுக்கு அருகே ப்ரீமண்ட் கடற்பகுதியில் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. கடலோர போலீசார் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது என்ஜின் பழுதாகி இருப்பதால் படகு இங்கு நின்று கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் அந்த படகில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் சுமார் 30 பைகள் காணப்பட்டன.

அதனை பிரித்து பார்த்தபோது 800 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து படகில் இருந்த 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சிட்னி விமான நிலையத்தில் வெளிநாட்டுக்கு புறப்பட தயாராக இருந்த மற்றொரு வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...