இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்

Date:

கனடாவில் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் பகிரங்கமாக குற்றச்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்தது. இந்த விவகாரத்தால் இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது.

 

கனடாவில் இருந்து இந்திய தூதரை வெளியேற கனடா அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் கனடா நாட்டு தூதரை வெளியேற உத்தரவிட்டது.

 

இதற்கிடையே இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகள் 41 பேரை திரும்ப அழைத்து கொள்ளுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியது.

 

இதற்கு வருகின்ற 10 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்துள்ளது. இந் நிலையில் இந்தியாவில் இருந்து கனடா தூதரக அதிகாரிகள் மலேசியா அல்லது சிங்கப்பூரிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

வருகின்ற 10 ஆம் திகதி கனடா தூதரக அதிகாரிகளை திரும்ப பெறுமாறு இந்தியா கேட்டுக் கொண்டதையடுத்து அவர்கள் இந்தியாவிற்கு வெளியே பணியாற்ற கனடா அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி இந்தியாவில் உள்ள பெரும்பாலான தூதர்களை மலேசியாவின் கோலாலம்பூர் அல்லது சிங்கப்பூரிற்கு இடமாற்றம் செய்துள்ளதாக கனடா நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

இது தொடர்பாக இந்திய அதிகாரிகளோ அல்லது கனடா அதிகாரிகளோ உத்தியோகபூர்வமாக தெரிவிக்கவில்லை

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...