இலங்கையின் இளம் தாய் எக்டோபிக் கர்ப்பத்தின் பின்னர் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுத்தார்

Date:

இலங்கையில் பெண் ஒருவர் அரிய முழு கால எக்டோபிக் கர்ப்பத்தின் பின்னர் சிசேரியன் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

கொழும்பில் உள்ள டி சொய்சா பெண்களுக்கான வைத்தியசாலையின் மருத்துவக் குழுவினர் சிசேரியன் அறுவை சிகிச்சையின் பின்னர் குழந்தையை வெற்றிகரமாக பிரசவிக்கச் செய்துள்ளனர்.

கருவுற்ற முட்டை கருப்பைச் சுவருக்கு வெளியே ஃபலோபியன் குழாய்கள், கருப்பை வாய் போன்றவற்றில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இது நிகழும்போது, அது எக்டோபிக் கர்ப்பம் என்று அழைக்கப்படுகிறது.

அடிவயிற்று கர்ப்பம் அல்லது எக்டோபிக் கர்ப்பம் மிகவும் அரிதாகவே நிகழ்வதாகவும், புள்ளிவிவரங்களின்படி 30,000 கர்ப்பங்களில் ஒன்று மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது என்றும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தநிலையில், திருகோணமலை கிண்ணியாவைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியொருவர் சில வாரங்களுக்கு முன்னர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் கருப்பைக்கு வெளியே கரு வளர்ந்திருப்பதை வைத்தியர்கள் அவதானித்தனர்.

குறித்த இளம் தாயை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்த போது, அவரது கரு 28 வாரங்களாக இருந்தது.

இந்தநிலையில், இது மிகவும் அரிதான கர்ப்பம் என்பதால், அவரை கொழும்பிலுள்ள டி சொய்சா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்தனர்.

இதனையடுத்து அவர் டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கரு வளரும் வரை 34 வாரங்கள் வரை அவரை கடுமையான மருத்துவ கண்காணிப்பில் வைத்தியர்கள் வைத்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...