வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
இன்று முற்பகல் 10.30க்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மொத்தமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 282 நபர்களுக்கு 12 இலட்சத்து 32 ஆயிரத்து 820 கிலோகிராம் அரிசி வழங்கப்படவுள்ளது.
நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 10 ஆயிரத்து 375 நபர்களுக்கு ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 750 கிலோகிராம் அரிசி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.