உக்ரைன் அதிபருடன் போருக்கு பின் முதன்முறையாக பிரதமர் மோடி நேரில் சந்திப்பு

Date:

ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி-7 உச்சி மாநாடு மே 19-ந் திகதி முதல் 21-ந் திகதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. உறுப்பினர் நாடு அல்லாதபோதும், ஜப்பானின் அழைப்பையேற்று பிரதமர் மோடி அந்நாட்டுக்கு சென்று உள்ளார்.

இதேபோன்று இந்த உச்சி மாநாட்டுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும் ஜப்பான் அரசு அழைப்பு விடுத்திருந்தது. இதன்படி, அவர் இன்று ஹிரோஷிமா நகருக்கு சென்று சேர்ந்து உள்ளார்.

இந்த உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக பல்வேறு நாட்டு தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதில், தனது நண்பரை சந்தித்ததில் மகிழ்ச்சி என ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கால்சுடனான சந்திப்பு பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டார். பிரான்சு நாட்டு அதிபர் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையும்நடத்தியுள்ளார்.

ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி பிரதமர் அலுவலகம் வெளியிட்ட புகைப்படத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் இடம் பெற்று உள்ளார்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கிய பின்னர் இரு தலைவர்களும் நேரில் சந்திப்பது இது முதன்முறையாகும். ரஷிய அதிபர் புடின் மற்றும் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பலமுறை பேசியிருக்கிறார்.

இது போருக்கான சகாப்தம் அல்ல என கடந்த ஆண்டு செப்டம்பரில் பேசும்போது பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இந்த போருக்கு, தூதரக அளவிலும் மற்றும் பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு காண வேண்டும் என்று மத்திய அரசும் கூறியது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...