போதைப்பொருள் வர்த்தகரான குடு சலிந்துவின் நெருங்கிய சகா ஒருவர் நேற்று விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார்.
விசேட அதிரடிப்படைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவு III இன் அதிகாரிகளால், பாணந்துறை – ஹொரண வீதியில், 33 வயதுடைய குறித்த நபர், 10 கிலோகிராம் கஞ்சா மற்றும் ஒரு இலட்சம் ரூபா பணத்துடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் உணவு விநியோகம் என்ற போர்வையில் குறித்த போதைப்பொருட்களை உந்துருளியில் கொண்டு சென்றுள்ளதாக அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர் பாணந்துறையில் போதைப்பொருள் வலையமைப்பைக் கையாண்டவர் எனவும் பாதாள உலகக்குழு உறுப்பினர் குடு சலிந்துவின் பிரதான துப்பாக்கிச் சூடு நடத்துநராகவும், தற்போது துபாயில் இருப்பதாக கூறப்படும் பெலியத்த ரணாவின் நிதி விவகாரங்களையும் கையாண்டவர் எனவும் தெரியவந்துள்ளது.