புற்றுநோய் தாக்கியதில் இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வையே பெர்லூஸ்கானி, மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தாலி முன்னாள் பிரதமரும், போர்சா இட்டலியா கட்சியின் தலைவருமான சில்வையோ பெர்லூஸ்கானி ,86, 2008 முதல் 2011 வரை இத்தாலி பிரதமராக இருந்தார்.
கடந்த 2021-ல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். இதையடுத்து ரத்த புற்றுநோய் பாதிப்பு இருந்து கண்டறியப்பட்டடது.
கடந்தசில தினங்களுக்கு முன் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதையடுத்து மிலன் நகரில் உள்ள சான் ரபேல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தற்போது அவர் ஐ.சி.யூ தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.