ஐதராபாத்தில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டது நடிகர் சரத்பாபு உடல்

Date:

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அதிக படங்களில் நடித்துள்ள மூத்த நடிகரான சரத்பாபுவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உள் உறுப்புகள் செயல் இழந்து வந்தன. உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

ஒரு மாதத்துக்கும் மேலாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சரத்பாபு நேற்று உடல்நிலை மோசம் அடைந்து மரணம் அடைந்தார்.

மறைந்த நடிகர் சரத்பாபுவின் உடல் நேற்று மாலை ஐதராபாத்தில் உள்ள பிலிம் சேம்பர் வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தெலுங்கு நடிகர்-நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் சரத்பாபு உடல் வேனில் ஏற்றப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த நடிகர் சரத்பாபு உடல் தி.நகரில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்படுகிறது. அதன் பின்னர் இன்று பிற்பகல் சரத்பாபு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...