ரஷியர்களிடம் சிறை பிடிக்கப்பட்டால், அது அவமதிப்பு ஆகும் என்று அவர் உறுதிப்பட கூறினார். போரின் தொடக்கத்தில் ரஷிய உளவு பிரிவினர் கீவ் நகரை தாக்க முயற்சித்தனர். எனினும், உக்ரைன் படைகள் அதனை முறியடித்தன.
பங்கோவா தெருவுக்குள்ளேயே ரஷிய படைகளால் நுழைய முடியவில்லை என அவர் கூறியுள்ளார்.
இந்த பகுதியிலேயே அதிபர் அலுவலகங்கள் உள்ளன. பல்வேறு முறை நடந்த, கீவுக்குள் நுழைவதற்கான பல முயற்சிகள் முறியடிக்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, அவர்கள் உள்ளே நுழைந்து விட்டால், நிர்வாகம் அவர்களால் கைப்பற்றப்பட்டால், நாங்கள் இப்போது இங்கிருக்க முடியாது.
ஆனால், ஒருவரையும் அவர்கள் சிறை பிடிக்க முடியாது. அந்தளவுக்கு படையினர் தயார்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். இறுதிவரையிலான போரை நாங்கள் நடத்துவோம் என கூறியுள்ளார். ரஷிய படைகளிடம் சிறை பிடிக்கப்படுவதற்கு பதிலாக உயிரை மாய்த்து கொள்வீர்களா? என்ற கேள்வியை அவர் நிராகரித்து உள்ளார்.
இல்லை. இல்லை. நான் துப்பாக்கியால் என்னை சுட்டு கொள்ளமாட்டேன். திருப்பி சுடுவேன். அது நிச்சயம் என்று அவர் பேட்டியில் கூறியுள்ளார்.