சமூக வலைத்தளத்தில் டிரென்டாக வேண்டும் இக்காலத்தில் பலரும் பல விதமான வினோத செயல்களில் ஈடுபட்டு கவனத்தை பெற விரும்புகின்றனர். இந்த வினோத செயல்களை ‘சேலஞ்ச்’ என்ற தலைப்பிட்டு ஒருவர் செய்வதை பார்த்து போட்டிக்கு நாமும் செய்வோம் என்ற பழக்கமும் இந்த டிரென்டிங் உலகில் உள்ளது. அப்படி ஒரு சேலெஞ்சில் டிரென்டாக வேண்டும் என்ற விபரீத ஆசையில் ஈடுபட்டு அமெரிக்காவில் 13 வயது சிறுவன் உயிரை இழந்துள்ளார்.
அமெரிக்காவின் ஒஹாயோ மாகாணத்தைச் சேர்ந்த சிறுவன் ஜஸ்டின் ஸ்டீவென்ஸ். அவரது தந்தை ஜேக்கப். இந்த சிறுவன் டிக்டாக் சமூக வலைதளத்தில் டிரென்டாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அப்போது, சளிக்கு பயன்படுத்தப்படும் பெனட்ரில் மருந்துகளை அதிக அளவிலான டோஸ் சாப்பிட்டு ஒருவிதமான மயக்க நிலையை யார் அடைகிறார்கள் என்ற சவால் டிக்டாக்கில் டிரென்டாகியது.
இந்த சவாலில் பங்கேற்க விரும்பி அந்த சிறுவன், சுமார் 12 இல் இருந்து 14 பெனட்ரில் மாத்திரைகளை விழுங்கியுள்ளான். இதை அவனது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதிக டோஸ் அவனது உடலுக்கு சேராமல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவனுக்கு சுமார் ஒருவார காலம் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை தரப்பட்டது. இருப்பினும் பலனின்றி 13 வயது சிறுவன் ஜேக்கப் பரிதாபமாக உயிரிழந்தார்
சிறுவனை இழந்த அவனது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். சிறுவர்கள் மத்தியில் சமூக வலைதளம் மூலம் இதுபோன்ற அபாயமான கருத்துகள் பரவுவது ஆபத்து. மற்றொரு குழந்தை இனி பாதிக்கக்கூடாது என சிறுவனின் தந்தை ஜஸ்டின் மற்றும் பாட்டி ஆகியோர் ஆதங்கத்துடன் தெரிவிக்கின்றனர்.