கொலம்பியாவில் பாதுகாப்பு துறை மந்திரியின் வருகைக்கு முன்னர் குண்டுவெடிப்பு

Date:

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவின் வடக்கு சான்டாண்டர் மாகாணத்தில் உள்ள திபு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சென்ற ஜீப் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் அந்த ஜீப் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக் கொண்டு சிதறி ஓடினர்.

இதனையடுத்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொலம்பியாவின் பாதுகாப்பு துறை மந்திரி இவான் வெலாஸ்குவெஸ் திபு நகருக்கு செல்வதற்கு சற்று முன்னர் இந்த தாக்குதல் நடந்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

நாட்டின் மிகப்பெரிய கிளர்ச்சி குழுவான புரட்சிகர ஆயுதப்படையின் அதிருப்தியாளர்களும், தேசிய விடுதலைப்படையினரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...