அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களில் வீசிய சூறாவளியால் மிசிசிப்பி மற்றும் அலபாமாவில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
தேடுதல் மற்றும் மீட்பு முயற்சிகள் தொடர்கின்ற நிலையில் மிசிசிப்பி மாநில அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
ரோலிங் ஃபோர்க்கில், நொறுக்கப்பட்ட வாகனங்கள், செங்கல்கள் மற்றும் கண்ணாடி குப்பைகள் தெருக்களில் குவிந்துள்ளன. கிட்டத்தட்ட அந்த நகரம் முற்றிலும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவில் ஏற்பட்ட சூறாவளி நிலை காரணமாக பலருக்கு முன் எச்சரிக்கை குறித்து அறிந்திருக்கவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.