கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம் பலாஷோர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன. எனினும் ரயில் விபத்து பற்றிய முழுமையான தகவல் எதுவும் வெளியாகவில்லை. சரக்கு ரயிலுடன் மோதியதில் ரயில் தடம் புரண்டதாகவும் தகவல் பரவி வருகிறது.
ரயிலின் 8 பெட்டிகள் வரை தடம் புரண்டதாகவும் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வரை இயக்கப்படுகிறது. வனப்பகுதியில் இந்த விபத்து நடைபெற்று இருப்பதாகவும் இரவு நேரம் என்பதால் கடும் சிரமங்களுக்கு இடையே மீட்பு பணிகள் நடப்பதாகவும் பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.