தனியார் பஸ் அட்டகாசம்: கிளிநொச்சி டிப்போ இ.போ.ச ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு!

Date:

 

கிளிநொச்சி இ.போ.சபை பணியாளர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், பஸ்கள் இன்று காலையில் சேவையில் ஈடுபடவில்லை.

அலுவலகப் பணியாளர்களிற்கான பஸ் சேவையை இ.போ.சபையினர் ஆரம்பித்த பின்னர், தனியார்துறையினர் அதில் குறுக்கீடு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, தற்போது தனியார் துறையினரே அந்த சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், அதன் தொடர்ச்சியாக இ.போ.ச பேருந்துகளின் சுமுகமான சேவைக்கு தனியார் துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தலாக செயற்பட்டு வருகின்றனர். நேற்றும் தனியார்துறை பஸ் ஒன்று, இ.போ.ச பஸ்ஸினை நடுவீதியில் வழிமறித்து மிரட்டல் விடுத்திருந்தது.

பணிப்புறக்கணிப்பிற்கான காரணத்தை இ.போ.ச கிளிநொச்சி டிப்போ ஊழியர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிற்கு அறிவித்திருந்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...