தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுவாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்த தர்ஷ்னா ஸ்ரீபால் தற்போது அதிலிருந்து விலகியுள்ளார்.
வட இந்தியாவை சேர்ந்த தர்ஷ்னா தொகுப்பாளினியாக இருந்து, சீரியல் நடிகையானவர். வளர்ந்தது, படித்தது எல்லாமே திருச்சியில் தான்.
ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள இவருக்கு டிசைனர் ஆகவேண்டும் என்பதே கனவு.
6 வருடங்களுக்கு முன்பு ஃபேஷன் டிசைனிங்க்காக சென்னை வந்த தர்ஷ்னா, பல நிறுவனங்களில் வேலை செய்துள்ளார்.
சன் டிவி-யில் ஸ்டைலிஷ் டிசைனர் வாய்ப்பு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவருக்கு காம்பியரிங் சான்ஸ் கிடைத்துள்ளது.
அதனால் சன் குழுமத்தின் ஆதித்யா சேனலின் லைவ் ஷோ ஒன்றில் ஆங்கராக பணியாற்றியுள்ளார் தர்ஷ்னா. அந்த ஷோவிற்கு நல்ல ரீச் கிடைத்தது.
சித்தி 2 சீரியலில் ராதிகாவின் மகள் யாழினியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சாதுவாக இருந்த அந்த கதாபாத்திரம் பின்னாட்களில் வில்லியாக மாறி அனைவரையும் மிரட்டியது.
பின்னர் தர்ஷ்னாவுக்கு விஜய் டிவி-யின் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வசுந்தரா (வசு) என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
முன்னணி கதாபாத்திரங்களில் ஒன்றான வசு, டைட்டில் ரோலில் நடிக்கும் சரஸ்வதியையே ஓவர்டேக் செய்து, ரசிகர்களிடம் பேரன்பையும், வரவேற்பையும் பெற்றார்.
அந்த சீரியலின் ப்ரோமோக்களில், ‘நாங்கள் இந்த சீரியலை பார்ப்பதற்குக் காரணமே வசு தான்’ என பலர் கமெண்டுகளில் தெரிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
தற்போது அந்த சீரியலை விட்டு விலகியிருக்கிறார் தர்ஷ்னா. இது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேறு ஏதேனும் முக்கிய சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் அதனாலே அவர் சீரியலை விட்டு விலகி இருப்பார் என்றும் கூறப்படுகிறது