பாகிஸ்தானில் காலிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை

Date:

காலிஸ்தானிய பயங்கரவாத அமைப்பின் கிளையாக பஞ்ச்வார் குழு உள்ளது. இந்த குழுவின் தலைவனாக பரம்ஜித் சிங் பஞ்ச்வார் (வயது 63) செயல்பட்டு வந்தார். பரம்ஜித் சிங்கை இந்தியா பயங்கரவாதியாக அறிவித்துள்ளார். இவர் பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தார்.

பரம்ஜித் சிங் நேற்று காலை தனது வீட்டில் இருந்து நடைபயிற்சிக்காக வெளியே சென்றார். நடைபயிற்சி செய்துகொண்டிருந்தபோது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் பயங்கராவாதி பரம்ஜித் சிங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் காலிஸ்தான் பயங்கரவாதியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச்சென்ற அடையாளம் தெரியாத நபரை தேடி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...