பாகிஸ்தானில் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பு

Date:

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பலர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வழிப்பறி, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள ஒரு டெய்லர் கடையில் துப்பாக்கிமுனையில் மிரட்டி திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது.

குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு டெய்லர் கடைக்குள் சம்பவத்தன்று மர்ம நபர்கள் வாடிக்கையாளர்கள் போல சென்றுள்ளனர். திடீரென அவர்கள் கடைக்குள் இருந்த தொழிலாளர்களை துப்பாக்கிமுனையில் மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் அங்கிருந்த விலை மதிப்புமிக்க ஆடைகள், செல்போன்கள் உள்ளிட்டவற்றை திருடி விட்டு தப்பி சென்றனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...