பாகிஸ்தானில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

Date:

பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பயங்கரவாதத்தை ஒடுக்கும் முயற்சியில் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக அந்த நாட்டின் துறைமுக நகரமான கராச்சியில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக அந்த வழியில் வந்த 2 மோட்டார் சைக்கிள்களை தடுத்து நிறுத்தி, சோதனையிட முயன்றனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் இருந்த 3 பயங்கரவாதிகள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரை நோக்கி சுட்டனர். இதற்கு பதிலடியாக போலீசாரும் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து அவர்களது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளில் நடந்த வாகன சோதனையில் 5 பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...