“பெருமைக்குரிய நாள்..” பத்மபூஷண் விருது பெற்ற மாமியாருக்கு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்து..!

Date:

பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். பிரபல சமூக தொண்டு செயல்பாட்டாளரும், எழுத்தாளருமான சுதா மூர்த்திக்கு இந்த விழாவில் பத்ம பூஷண் வழங்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த சுதா மூர்த்தி இந்த விருதை குடியரசு தலைவர் முர்முவிடம் பெற்றுக்கொண்டார்.

இவர் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி ஆவார். நாராயண மூர்த்தி-சுதா மூர்த்தி தம்பதியின் மகளான அக்ஷதா மூர்த்தியின் கணவர் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது தாயார் பத்ம பூஷண் விருது பெற்ற புகைப்படத்தை ரிஷி சுனக்கின் மனைவியும், சுதா மூர்த்தியின் மகளுமான அக்ஷதா மூர்த்தி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். தனது சமூக பங்களிப்புக்காக குடியரசு தலைவர் கைகளில் இருந்து என தாயார் பத்ம பூஷண் விருது வாங்கியதை நான் பார்த்தேன்.

வார்த்தைகளால் கூற முடியாத பெருமையை உணர்ந்தேன் என்று அக்ஷதா மூர்த்தி பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், 25 ஆண்டுகளாக தனது தாயார் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ச்சியாக சமூக தொண்டுகளை ஆற்றி வருவதாக மகள் அக்ஷதா கூறியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...