எதிர்வரும் பண்டிகை நாட்களில் தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள், சுற்றுலாப் பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.
ஒரு தனிநபரினால் தமது சமூக வலைத்தளப்பகத்தில் பகிரப்படும் தகவல்களை பயன்படுத்தி, அவர்கள் இல்லாத நேரத்தில், வீடுகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட பயணங்கள், நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.