பொது மக்களிடம் காவல்துறையினர் முன்வைத்துள்ள விசேட கோரிக்கை!

Date:

எதிர்வரும் பண்டிகை நாட்களில் தாங்கள் முன்னெடுக்கப்போகும் நடவடிக்கைகள், சுற்றுலாப் பயணங்கள் பற்றிய விபரங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைய நாட்களில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

ஒரு தனிநபரினால் தமது சமூக வலைத்தளப்பகத்தில் பகிரப்படும் தகவல்களை பயன்படுத்தி, அவர்கள் இல்லாத நேரத்தில், வீடுகளில் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட பயணங்கள், நடவடிக்கைகள் குறித்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதை தவிர்க்குமாறு காவல்துறை ஊடகப் பேச்சாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...