போக்குவரத்து அபராத தொகை அதிகரிப்பு?

Date:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

வாகனம் செலுத்துவதற்கு முன்னர் சாரதியின் உடல் நலம் மற்றும் மன நிலையை ஆகியவற்றை துல்லியமாக பரிசோதிக்கும் இயந்திரம் வெயங்கொடையில் உள்ள தனியார் சாரதி பாடசாலை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ளது.

அதனை பாா்வையிடுவதற்காக வந்த போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தொிவித்துள்ளாா்.

மேலும் கருத்து தொிவித்த அவா், தற்போது நடைபெற்று வரும் சோதனைகள் தவிர, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சாரதிகளின் உடல்நலம் மற்றும் மன நிலையை அளவிடுவதற்கான ஒரு முறையை நாங்கள் உருவாக்கியுள்ளோம்.

குறிப்பாக அபராதத்தை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தண்டனையை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...