மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இரு தச்சு தொழிலாளர்கள் உயிரிழப்பு!

Date:

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அமிர்தகழி பிரதேசத்தில் வீடு ஒன்றின் மேல்மாடி கூரையை திருத்தும் வேiலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தச்சு தொழிலாள்கள் மீது மின்சார தாக்கியதில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று புதன்கிழமை (14) பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருதயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ரொக்கி சைய்டே மற்றும் கருவப்பங்கேணியைச் சேர்ந்த 25 வயதுடைய ஞானபிரகாசம் கோடிசன் ஆகியேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் .

அமிர்தகழி பாடசாலை வீதியிலுள்ள மேல்மாடி வீட்டின் ஒருபகுதில் இன்று காலையில் 3 தச்சு தொழிலாளர்கள் கூரையில் திருத்த வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

இதன் போது பகல் 11 மணியளவில் கூரையின் இருந்த தகரம் கழன்று வீதியில் இருந்து வீட்டிற்கு வரும் மின்சார வயரினை வெட்டியதையடுத்து தொழிலாளர்கள் மீது மின்சாரம் தாக்கியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதனையடுத்து 1919 அவசர அம்புயூலன்ஸ் சேவைக்கு தெரியப்படுத்தியதையடுத்து அவர்கள் சென்று பரிசோதித்தில் இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்து காயமடைந்த 25 வயதுடைய இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இதேவேளை உயிரிழந்த இருவரையம் முச்சக்கரவண்டி ஒன்றி வீட்டின் உரிமையாளர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...