மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்றவர் கைது!

Date:

ஹொரணை பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து நூறு மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதோடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஹொரணை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் சந்தேக நபரை ஹொரணை தெல்கஹ கொடல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் ஹொரணை நகரிலுள்ள பயிற்சி வகுப்புகளுக்கு வரும் மாணவர்களை இலக்கு வைத்து 250, 300 மற்றும் 500 ரூபா போன்ற விலைகளில் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

50 வயதுடைய சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹொரணை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...