மிளகாய் தூள் எறிந்து பணம் கொள்ளை

Date:

அத்துருகிரிய பகுதியில் கோழி இறைச்சி வர்த்தகர் ஒருவரின் கண்கள் மீது மிளகாய் தூள் எறிந்து பணத்தை கொள்ளையிட்ட பெண்கள் இருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகருக்கு சொந்தமான பாரவூர்தியின் சாரதி, வர்த்தகரின் மனைவி மற்றும் பிரிதொரு பெண் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வர்த்தகர் மற்றும் சந்தேக நபர்கள் மூவரும் பாரவூர்தியில் பயணித்துக்கொண்டிருக்கையில் இயற்கை உபாதை கழிப்பதற்காக வாகனத்தை நிறுத்திய சந்தர்ப்பத்திலேயே வர்த்தகருக்கு மிளகாய் தூள் எறியப்பட்டுள்ளது.

வர்த்தகரிடமிருந்து கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 86 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...