முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்…

Date:

தமிழ்நாடு முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. தமிழக மக்களுக்கு மிகுந்த சிரத்தையுடனும், நேர்மையுடனும் சேவையாற்றிய அவர், சிறந்த நிர்வாகியாக என்றும் நினைவுகூரப்படுவார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.

2005- 2010 வரையிலான 5 ஆண்டுகளில் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியாக நரேஷ் குப்தா பணியாற்றினார். காந்தியவாதியாக அறியப்படும் இவர், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டவர். 2009 திருமங்கலம் இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா சம்பவத்திற்குப் பிறகு, கடுமையான முடிவுகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...