யாழில் சிறுவர் இல்லம் முற்றுகை

Date:

யாழ்ப்பாணம் – இருபாலை பகுதியில் அனுமதியின்றி நடத்தி செல்லப்பட்ட சிறுவர் இல்லம் முற்றுகையிடப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் இருந்து 17 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

அவர்கள், சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஊடாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தப்படவுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உரிய வகையிலான பராமரிப்பு மற்றும் வசதிகள் அந்த சிறுவர் இல்லத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து குறித்த சிறுவர் நிலையம் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் ஆணையாளர் ராஜேந்திரம் குருபரன் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...