வங்காளதேசத்தில் வெப்பநிலை உயர்வால் அரிசி உற்பத்தி 40 சதவீதம் குறையும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

Date:

காலநிலை மாற்றத்தால் உலகில் தற்போது ஏற்பட்டு வரும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று வெப்பநிலை அதிகரிப்பு ஆகும். அதன்படி நம் அண்டை நாடான வங்காளதேசத்திலும் வெப்பநிலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. அதாவது நாட்டின் தலைநகரான டாக்காவில் கடந்த மாத நிலவரப்படி அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது 4 டிகிரி செல்சியஸ் அதிகம் ஆகும்.

இந்த வெப்பநிலை அதிகரிப்பு குறித்து வங்காளதேசத்தின் வானிலை ஆய்வு மைய இயக்குனர் அஜிசுர் ரகுமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளில் இது அதிகபட்ச வெப்பநிலை ஆகும். வருகிற நாட்களில் வெப்ப அலை மீண்டும் உருவாகி நாட்டில் அரிசி உற்பத்தி 40 சதவீதம் வரை குறையலாம். எனவே மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவு பாதுகாப்புக்கு இது மிகுந்த அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...