அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள அமெரிக்கா: வங்கியில் புகுந்து துப்பாக்கிச் சூட்டில் – 5 பேர் பலி லூயிஸ் வில்லி நகரின் கிழக்கு முதன்மை சாலையில் ‘ஓல்டு நேஷனல் வங்கி’ கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று இந்த வங்கிக்குள் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் அங்கிருந்த பலர் காயம் அடைந்தனர்.
இறுதியாக கிடைத்த தகவலின்படி இந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்து உள்ளனர். மேலும் 6 பேர் ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்தியதாக கருதப்படும் நபரும் இறந்து விட்டார். அந்த பகுதி போலீசார் இதுகுறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டு, அந்த பகுதியின் வழியாக செல்ல வேண்டாம் என்று மக்களை எச்சரித்து உள்ளனர்.