விருதுநகர் பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி வெடி விபத்து

Date:

விருதுநகர் மாவட்டம் வி.ராமலிங்கபுரம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அவ்வபோது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இன்று பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வந்த போது இடி, மின்னலுடன் மழை பெய்தது. அப்போது பட்டாசு ஆலையில் வெடி தயாரிக்கும் அறையின் மீது மின்னல் தாக்கி வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவத்தில் அங்கு பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 55 வயது பெண் தொழிலாளர் புஷ்பம் என்ற பெண் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலைக்கு விரைந்து வந்து தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...