விவசாய அதிகாரி கொலை- “டேனி பேபி” கைது!

Date:

இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான  என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த திருமணமான பெண் என தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தான் வசிக்கும் அதே பகுதியில் பணிபுரிந்து வந்ததோடு, இன்று வீட்டில் இருந்து வயல் பணிக்காக சென்றுக்கொண்டிருந்த போது, ​​நேற்று முன்தினம் ஏற்பட்ட பணி பிரச்சனை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 வயதான ஜயவர்தன பத்திரனகே சரத் எனப்படும் ‘டேனி பேபி’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...