வேடிக்கையான செயற்பாடு சோகமானதாக மாற இடமளியாதீர்கள்

Date:

அண்மைக்காலமாக பல வீதி விபத்துக்களில் பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டுமெனவும் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

காவல்துறை அதிகாரிகளால் வீதியில் செல்லும் ஒவ்வொரு வாகனத்தையும் சோதனை செய்ய முடிவதில்லை.

இதனைக் கருத்திற்கொண்டு, குறிப்பாக பெற்றோர்கள் பாடசாலை மாணவர்களிடம் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விடுமுறை காலத்தில் மது அருந்திவிட்டோ மிக வேகமாகவோ வாகனம் செலுத்த வேண்டாம்.

மதுபோதையில் வாகனம் செலுத்தினால் உங்களுக்கும், வீதியில் செல்பவர்களுக்கும், வாகனத்தில் உள்ளவர்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடும்.

விபத்து ஏற்பட்டால், உயிர் மற்றும் உடமைகளுக்கு சேதம் ஏற்படலாம். இந்த பண்டிகை காலத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுங்கள்.

ஆனால் வேடிக்கையானது கடைசியில் சோகமாக மாறக்கூடாது என்பதை நினைவூட்டுகிறேன்.

வீதியில் பயணிக்கும் போது, கவனமாக பயணிக்க வேண்டும். விபத்துகளைத் தவிர்க்க அவதான இருங்கள்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...