யாழ். போதனா வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து வீழ்ந்த நிலையில் உயிரிழந்த குழந்தையின் சடலமொன்று இன்று (22) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர்.
உடைந்த நீர் குழாய் வழியாக சிசுவின் சடலம் விழுந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், குழந்தை பிரசவத்தின் பின்னர் தூக்கி வீசப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.