ஹிக்கடுவ – சீனிகம விகாரைக்கு அருகில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ரத்கம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் காயமடைந்து, கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் உந்துருளியில் சென்ற இருவர் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
சந்தேகநபர்கள் குறித்த பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவர்களை தேடும் பணிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினர் தமது மகிழுந்திலேயே ஹிக்கடுவ காவல்நிலையத்துக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் காவல்துறையினரால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ரத்கம பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஒருவரே காயமடைந்துள்ளார்.