ஹோமாகம – மாஒல்கொட பேரூந்து சாலைக்கு அருகில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம், பாதாள உலகக் குழுவின் செயற்பாடு என மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மனித கொலைகள், பல்வேறு குற்றச் செயல்கள் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடைய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக கூறப்படும் அத்துருகிரிய லடியா என்பவருக்கு இந்த சம்பவத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரின் உத்தரவுக்கு அமைய அத்துருகிரிய ஜெரம் என்பவரால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
நேற்றிரவு 8 மணியளவில் ஹோமாகம – மாஒல்கொட ரணசிங்க மாவத்தை பகுதியிலுள்ள பேரூந்து சாலையில் உந்துருளியில் சென்ற இருவரினால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.