ஆசிரியை பணியை உதறி, ஆபாச பட நடிகையானவர்:

Date:

அமெரிக்காவின் மிசோரி (Missouri) மாநிலத்தில் உள்ளது செயின்ட் க்ளேர் உயர்நிலை பள்ளி (St. Clair High School). இங்கு ஆங்கில பாடம் நடத்தும் ஆசிரியையாக பணிபுரிந்தவர் பிரையன்னா கோப்பேஜ் (Brianna Coppage).

முதுநிலை பட்டம் பெற்ற ஆசிரியையான பிரையன்னா, ஊதியமாக ரூ.35 லட்சம் ($42,000) வரை பெற்று வந்தார். ஆனால், அவருக்கு இருந்த கல்வி கடன் மற்றும் சில பொருளாதார சிக்கல்களால் அவருக்கு பண நெருக்கடி ஏற்பட்டது.

நிலைமையை சமாளிக்க அவர் கணவருடன் சேர்ந்து ஆபாச படங்களில் நடித்து, அவற்றை லண்டனை சேர்ந்த ஒரு பிரபல வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்தார். இதன் மூலம் பல ரசிகர்கள் அவரை இணையத்தில் பின்தொடர்ந்தனர். இதில் அவரது வருவாய் அதிகரித்தது.

பிரையன்னாவிற்கு மாதாமாதம் சுமார் ரூ.6 லட்சம் ($8000) அதிகப்படியாக கிடைத்து வந்தது.

இந்நிலையில், ஒரு பள்ளி ஆசிரியையான அவரை வீடியோவில் அடையாளம் கண்டு கொண்ட ஒருவர், அம்மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் இது குறித்து புகாரளித்தார். இதனையடுத்து, அவரை அத்துறையும், அவர் பணிபுரிந்த பள்ளி நிர்வாகமும் விசாரணை செய்தது.

இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பள்ளி நிர்வாகமும், கல்வித்துறையும் ஆலோசித்து வந்தது.

ஆனால், பிரையன்னா தற்போது தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்துள்ளார். தனது முடிவை குறித்து அவர் எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளங்களில் உணர்ச்சிமயமாக விவாதிக்கப்படுகிறது.

பிரையன்னா அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

நான் கல்வி கற்று கொடுத்த மாணவர்கள் இச்செய்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும். என்னால் பள்ளிக்கு கெட்ட பெயர் வருவதை நான் விரும்பவில்லை. மீண்டும் ஆசிரியை பணிக்கு நான் திரும்பினால் அனைத்தும் முன்பு போல் இருக்காது என நான் அறிவேன். ஒரு மதிப்பு வாய்ந்த முன்னுதாரணமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. நான் மாணவர்களுக்கு பாட திட்டத்தில் உள்ளதை மட்டுமே பயிற்றுவித்தேன். என்னுடைய சித்தாந்தங்கள் எதையும் அவர்களிடம் புகுத்தவில்லை. என்னை குறித்த மக்களின் எண்ணங்களை நான் கட்டுப்படுத்த முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சில தினங்களுக்கு முன், மின்னசோட்டா (Minnesota) மாநிலத்தில் ஒரு பெண் காவல் அதிகாரி அதிக வருமானத்திற்காக இதே போன்று வலைதளத்தில் மாடலாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதும் அவரை பணி நீக்கம் செய்ய மக்கள் கோருவதும் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...