சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 82 இலட்சம் ரூபாவை ஈட்டியாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – டேம் வீதியில் வைத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் கைதாகியுள்ளனர்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.