உண்டியல் முறையில் 82 இலட்சம் ரூபா பணம் ஈட்டியதாக இருவர் கைது!

Date:

சட்டவிரோத உண்டியல் பணப்பரிமாற்ற முறையின் மூலம் 82 இலட்சம் ரூபாவை ஈட்டியாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு – டேம் வீதியில் வைத்து இந்த இரண்டு சந்தேகநபர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரிடம் கைதாகியுள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

வத்தளையைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரும், வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வாழைத்தோட்டம் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...