கனடாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: 2 பேர் பலி

Date:

கனடாவின் தலைநகர் ஒட்டாவா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள இன்பினிட்டி கன்வென்ஷன் சென்டரில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. அப்போது ஒரு கும்பல் அங்கு புகுந்து துப்பாக்கியால் சுட்டது.

இதனால் அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் டொரண்டோவை சேர்ந்த சையத் மொஹமது அலி(வயது 26), அப்திஷாகுர் அப்தி தாஹிர்(36) ஆகிய 2 பேர் பலியானார்கள்.

6 பேர் காயம் அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கி சூட்டுக்கான காரணம் என்ன? இனப்பிரச்சனையில் இந்த சம்பவம் நடைபெற்றதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் காஸ்பர் ரூட்

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர்...

ஐ.பி.எல். தொடரில் 200 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த சாஹல்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்,...

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களை சந்தித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபு

நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்...

சதம் விளாசிய ஜெய்ஸ்வால்- 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்

ஐபிஎல் தொடரின் இன்றைய 38-வது லீக் ஆட்டத்தில் மும்பை- ராஜஸ்தான் அணிகள்...