காபூல் விமான நிலைய தாக்குதல்

Date:

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியேறியதும், அந்த நாடு தலீபான்கள் வசமானது. அதனை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக காபூல் விமான நிலையத்தில் குவிந்தனர். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்து வந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி காபூல் விமான நிலையத்தில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வெடித்தன.

இதில் அப்பாவி பொதுமக்கள் 170 பேர் மற்றும் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் கொல்லப்பட்டனர். உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவரை தலீபான் படையினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் இதனை தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் சுட்டுக்கொல்லப்பட்ட ஐ.எஸ். பயங்கரவாத தலைவரின் பெயர், அவர் எங்கு, எப்போது கொல்லப்பட்டார் என்பன போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...