குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு வசதி

Date:

நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021ல் 12,231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, அதில் 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2022ல் 1,465 வீடுகளின் பணிகள் தொடங்கப்பட்டாலும், 25 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட முடிக்கப்படாத வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்வதற்காக 3,750 மில்லியன் ரூபாவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...