கொழும்பின் பல பகுதிகளிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோட் உப மின்நிலையம் மற்றும் மருதானையில் உள்ள 220 கிலோ வோட் உப மின்நிலையம் என்பன திடீரென செயலிழந்தமையினால் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளிலும், கொலன்னாவை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.