கொழும்பு, புறநகர் பகுதிகளில் திடீர் மின்தடை!

Date:

கொழும்பின் பல பகுதிகளிலும், அதனை அண்மித்த புறநகர் பகுதிகளிலும் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலன்னாவையில் உள்ள 132 கிலோ வோட் உப மின்நிலையம் மற்றும் மருதானையில் உள்ள 220 கிலோ வோட் உப மின்நிலையம் என்பன திடீரென செயலிழந்தமையினால் இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு 4, 5, 7, 8, 10, 12 ஆகிய பகுதிகளிலும், கொலன்னாவை உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக இலங்கை மின்சார சபை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...