திண்டிவனம்-நகரி ெரயில்பாதை நில உரிமையாளர்களிடம் இறுதி தீர்வு விசாரணை

Date:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பகுதிகள் வழியாக ஆந்திர மாநிலம் நகரிக்கு புதிய ெரயில்பாதை அமைக்கப்பட உள்ளது.

இதற்காக வந்தவாசியை அடுத்த கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் 30 ஏக்கர் நிலம் தனிநபர்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட உள்ளது .இதையடுத்து இந்த நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக நில உரிமையாளர்களிடம் இறுதி தீர்வு விசாரணை கூட்டம் வந்தவாசியில் இன்று நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கினார். அப்போது அவர், கையகப்படுத்தப்பட உள்ள நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை நிர்ணயம் செய்வது தொடர்பாக நில உரிமையாளர்களுக்கு விரிவாக எடுத்து கூறினார்.

இதில் வந்தவாசி தாசில்தார் கி.ராஜேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுபாஷ்சந்தர், ெரயில்வே தனி தாசில்தார் வேணுகோபால், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் நில உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...