ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையிலான சில சரத்துக்கள் உள்ளமையின் காரணமாகவே அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு தென்னிலங்கையிலும் எதிர்ப்பு வெளியாகியுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவைக்கு கருத்துரைத்த அவர், தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கும் புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்துக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்கினார்.
புதிய சட்டமூலத்தில் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பல சரத்துகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதிலும் ஜனநாயக செயற்பாடுகளை ஒடுக்கும் வகையிலான சரத்துக்களும் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.