பூண்டுலோயா திருவிழாவில் நகை கொள்ளை.

Date:

பூண்டுலோயா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பல்லேகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நகைகளை இழந்தவர்கள் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து பூண்டுலோயா திருவிழாவில் திருடப்பட்ட 17 பவுண் நகைகளும், அதற்கு மேலதிகமாக திருடப்பட்ட 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை நேற்றைய தினம் நாவலப்பிட்டி நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை அடையாள அணிவகுப்புக்காக தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...