பூண்டுலோயா ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கும்பாபிஷேக திருவிழாவில் பக்தர்களிடம் நகைகளை கொள்ளையிட்ட 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 7 பெண்கள் மற்றும் 2 ஆண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்கள் பல்லேகலை , வவுனியா, புத்தளம், யாழ்ப்பாணம் , கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
நகைகளை இழந்தவர்கள் காவல்துறையில் செய்த முறைப்பாட்டுக்கமைய, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து பூண்டுலோயா திருவிழாவில் திருடப்பட்ட 17 பவுண் நகைகளும், அதற்கு மேலதிகமாக திருடப்பட்ட 100 பவுணுக்கும் மேற்பட்ட நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நேற்றைய தினம் நாவலப்பிட்டி நீதிவானிடம் முன்னிலைப்படுத்திய போது, அவர்களை அடையாள அணிவகுப்புக்காக தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.