பேஸ்புக் காதலால் – 15 வயது மாணவி துஷ்பிரயோகம்

Date:

15 வயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை நீதிவான் நேற்று செவ்வாய்க்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக 15 வயது சிறுமியுடன் தொடர்பைப் பேணிய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த 22 வயதுடைய குறித்த இளைஞர், சிறுமியை பிறிதொரு இடத்தில் சந்தித்து அவர் தங்கியிருந்த வீட்டுக்கு அழைத்துச் சென்று பல நாட்கள் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தனது மகள் இனந்தெரியாத இளைஞனுடன் வீடு ஒன்றில் தங்கியிருப்பதாக சிறுமியின் தாயாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் சிறுமியின் தாய் திவுலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைத்ததையடுத்து, சிறுமி தாயின் பாதுகாப்பில் இருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...