100 நாள் வேலை பொறுப்பாளர் எடுத்த விபரீத முடிவு…

Date:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணித்தள பொறுப்பாளர், ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், ஊராட்சி செயலாளர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகலட்சுமி நூறு நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளராக பணியாற்றி வந்தார். புதன்கிழமையன்று மதுரை நோக்கி சென்ற பேருந்தில் பயணம் செய்த அவர், சிவரக்கோட்டை அருகே பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், தனது தற்கொலைக்கு மையிட்டான்பட்டி ஊராட்சி துணைத் தலைவர் பாலமுருகன், வார்டு உறுப்பினர் வீரக்குமார், ஊராட்சி செயலாளர் முத்து ஆகியோரே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.

இதன்பேரில் காவல்துறையினர் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். இந்த நிலையில், மூவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் நாகலட்சுமியின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக்கூறி ராஜாஜி அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புகாருக்கு உள்ளான ஊராட்சி செயலாளர் முத்துவை பணியிடைநீக்கம் செய்து மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...