11 தமிழக மீனவர்கள் விடுதலை..

Date:

இந்தியக் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த மாதம் 23 ஆம் திகதி மீன்பிடிக்க இரண்டு படகுகளுடன் 12 மீனவர்கள் கடலுக்குச் சென்றுள்ளனர். அப்போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை அவர்களைப் படகுகளுடன் கைது செய்தது.

அதனைத்தொடர்ந்து, 12 பேரையும் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர் . இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநீதிபலன், மீனவர்கள் 11 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் ஒரு மீனவர் இரண்டாவது முறையாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதால், அவருக்கு மட்டும் 14 மாதங்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் மீனவர்கள் பயன்படுத்திய ஒரு படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. மற்றொரு படகு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...