டெல்லியில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்தது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற G-20 உச்சிமாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான G-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டுக்கான G-20 உச்சிமாநாடு பிரேசில் நாட்டில் இடம்பெறவுள்ளது.
இந்தியாவிடமிருந்து G-20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெற்றுக்கொண்ட பின் பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா தெரிவிக்கையில்,
பிரேசிலின் தலைமையிலான G-20 கூட்டமைப்பு 3 முக்கியத்துவங்களை கொண்டுள்ளது.
1. சமூக ஒன்றிணைப்பு மற்றும் பட்டினிக்கு எதிரான போராட்டம்
2. ஆற்றல் மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி
3. உலகளாவிய நிர்வாக நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவையாகும்.
‘நியாயமான மற்றும் நிலையான உலகத்தை கட்டமைத்தலே’ பிரேசில் தலைமையிலான G-20 கூட்டமைப்பின் பொன்மொழியாகும். பசி மற்றும் வறுமைக்கு எதிரான உலகளாவிய கூட்டணி, காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய அணி திரட்டல் ஆகிய இரு அணிகள் உருவாக்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.