நில்வள கங்கையை அண்டிய அக்குரஸ்ஸ, திஹாகொட, மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் அதிகளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தெரிவித்தார்.
இது தொடர்பில் இவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜிங் கங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கும் உயர்வடைந்து வருவதாக தெரிவித்தார்.
குறித்த பிரதேச மக்களும் வீதிகளில் பயணிக்கும் மக்களும் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
கொழும்பு, கண்டி, புத்தளம், முதலான பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும் எனவும், மக்கள் அனைவரும் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பகுதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.