2 கோடி பெறுமதியான கொக்கெய்னுடன் வெளிநாட்டு பிரஜை கைது !

Date:

சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான 350 கிராம் கொக்கெய்னுடன் மெசிடோனியா நாட்டு பிரஜை ஒருவரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் இன்று (13) கைது செய்துள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகத்திற்கிடமான நடத்தை காரணமாக பிரேசில் நாட்டிலிருந்து வருகைதந்த மெசிடோனிய பிரஜையை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, ​​அவர் வைத்திருந்த பையில் கொக்கெய்ன் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 54 வயதுடைய சந்தேகநபர் இலங்கைக்கு வருவது இதுவே முதல் தடவை எனவும் சந்தேக நபருடன், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டு யானைகள் மோதியதில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்து தடம் புரள்வு

ஹிங்குரக்கொட பகுதியில் எரிபொருளை ஏற்றிச் சென்ற தொடருந்துடன் மோதி இரண்டு காட்டு...

இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல நாள்..!

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், உலகுக்கும் நல்ல...

வேட்பாளர்கள் பிரசாரங்களுக்கு செலவிடக் கூடிய தொகை நிர்ணய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்!

பொதுத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள், வேட்பாளர்கள் பிரசாரங்களுக்காக...

இன்றைய ராசிபலன் – 18 அக்டோபர் 2024

மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பெருமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய கடமைகளை...